கோவை கவுண்டம்பாளையம் சாமூண்டீஸ்வரி நகரை சேர்ந்தவர் சங்கீதா(39). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று கவுண்டம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தார். தனது கைப்பையை கீழே வைத்திருந்தார். அப்போது அங்கு வந்த பெண் ஒருவர் நைசாக கைப்பையில் வைத்திருந்த மணிபர்சை திருட முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சங்கீதா அங்கிருந்தவர்கள் உதவியுடன் அந்த பெண்ணை பிடித்து கவுண்டம்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், பணம் திருட முயன்றது திருவண்ணாமலை மாவட்டம் கட்டாமடவை சேர்ந்த அலமேலு(48) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.