மகாகவி நினைவு தினம்: தமிழக அமைச்சர்கள் மரியாதை.!

69பார்த்தது
மகாகவி நினைவு தினம்: தமிழக அமைச்சர்கள் மரியாதை.!
மகாகவி பாரதியாரின் நினைவு தினம் இன்று (செப்.11) அனுசரிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு தமிழக அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் வேலு மற்றும் அதிகாரிகள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி