சிங்காநல்லூர் - Singanallur

குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தற்கொலை

குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தற்கொலை

கோவை கஸ்தூரி நாயக்கன்பாளையம் மாகாளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சுபாஷ். இவரது மனைவி அனிதா (33). இவர் அதே பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வந்தார். இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் கடந்த சில நாட்களாக அனிதா கடும் மன உளைச்சலில் இருந்தார். இந்நிலையில், வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் சம்பவதினத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా