தொழில் பழகுநர் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு மாதம் ரூ.14,000 உதவித்தொகையுடன் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் பயிற்சி வழங்கப்படுகிறது. எம்எம்வி, மெக்கானிக் டீசல், எலக்ட்ரீஷியன், ஆட்டோ எலக்ட்ரீஷியன், வெல்டர், ஃபிட்டர், டர்னர், பெயின்டர் ஆகிய பிரிவுகளில் 500 காலியிடங்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. தகுதியுடையவர்கள் வரும் 26ம் தேதி காலை 10 மணியளவில் குரோம்பேட்டை மாநகர் போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி பள்ளியில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.