11ம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இத்தேர்வின் வாயிலாக 1500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதம் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. 2024-25 கல்வி ஆண்டில் தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற அனைத்து வகையான பள்ளிகளில் படிக்கும் 11-வது மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி செப்டம்பர் 19. கூடுதல் தகவல்களுக்கு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரை அணுகவும்.