தேசிய கல்விக் கொள்கையை ஏற்கப்போவதில்லை - உதயநிதி

74பார்த்தது
தேசிய கல்விக் கொள்கையை ஏற்கப்போவதில்லை - உதயநிதி
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்தது. ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “மாணவர்கள் நலன் கருதி தேசிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. இதற்கு முதல்வர் ஏற்கனவே பதில் அளித்துவிட்டார். தேசிய கல்விக் கொள்கையை ஏற்க போவதில்லை என அறிவித்துள்ளோம். அந்த முடிவில் உறுதியாக இருக்கிறோம்” என கூறினார்.

தொடர்புடைய செய்தி