வேப்பனஹள்ளி - Veppanahalli

மத்தூரில் பேருந்து நிலையத்தில் பாமாகாவினர் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் பேருந்து நிலையத்தில் பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்தூர் ஊராட்சி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மத்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள 72 வணிகக் கடைகளுக்கு முறையாக ஒப்பந்தப்புள்ளி மேற்கொள்ளாமல் தனிப்பட்ட நபருக்கு வாடகைக்கு விட்டு முன் பணத்தினை முறையாக அரசுக்கு சேராமல் வீணடிப்பதை கண்டித்து மாவட்ட செயலாளர் ராஜசேகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம். நடந்தது. பின்னர் பி. டி. ஒ. விடம் இதுகுறித்து மனு அளித்தனர். இதில் திரளான பாமகவினர் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


கிருஷ்ணகிரி
Sep 23, 2024, 13:09 IST/ஊத்தங்கரை
ஊத்தங்கரை

பட்டாசு கடை உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

Sep 23, 2024, 13:09 IST
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பட்டாசு கடை உரிமையாளர்களுக்கு தற்காலிக உரிமம் வழங்குவது, பாதுகாப்பான பட்டாசு விற்பனை, பட்டாசு கடை உரிமையாளர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கே. எம். சரயு இ. ஆ. ப. , அவர்கள் தலைமையில் இன்று (23. 09. 2024) நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பெ. தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் திரு. அ. சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி. புஷ்பா, ஓசூர் சார் ஆட்சியர் திருமதி. பிரியங்கா இ. ஆ. ப, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் திரு. சீ. பாபு உள்ளிட்ட பலர் உள்ளனர்.