பர்கூர் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழப்பு

71பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த நேரல கோட்டை கிராமத்தை சேர்ந்த அனுமன், செந்தாமரை தம்பதியின் மகன் வினோத் (31). இந்நிலையில் இன்று(செப்.23) காலை பர்கூர் அருகே உள்ள நாடார் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த செந்தில் என்பவரின் வீட்டு கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது இரும்பு கம்பிகளை மேல் நோக்கி தூக்கும்போது எதிர்பாராத விதமாக வினோத் மீது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பர்கூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே வினோத் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பர்கூர் போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி