மத்தூர்: இளம் பெண் மாயம்-போலீசார் விசாரணை
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்துார் அடுத்த கணுக்கனூரை சேர்ந்தவர் மீனா(24) கூலித் தொழிலாளி. நேற்று முன்தினம்(செப்-20ம் தேதி) வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் திடீர் என்று மாயமானார். இதுகுறித்து மனைவியின் கணவர் மத்துார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் கொடமாண்டப்பட்டி பகுதியை சேர்ந்த அருள் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.