வேப்பனஹள்ளி - Veppanahalli

போச்சம்பள்ளி: சென்னகேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

போச்சம்பள்ளி: சென்னகேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பண்ணந்தூர், சென்னகேசவ பெருமாள் கோவில்களில் இன்று செப்-21- காலை மூலவர் சென்னகேசவ பெருமாளுக்கு திருமஞ்சனம், மற்றும் அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு 'கோவிந்தா, கோவிந்தா' முழக்கத்துடன் பெருமாளை தரிசனம் செய்தனர். பின்னர் சென்ன கேசவப்பெருமாள் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

வீடியோஸ்


கிருஷ்ணகிரி