கிள்ளியூர் - Killiyur

கிள்ளியூர் எம். எல். ஏ. ராஜேஷ்குமார் மே தின வாழ்த்துச் செய்தி

கிள்ளியூர் எம். எல். ஏ. ராஜேஷ்குமார் மே தின வாழ்த்துச் செய்தி

தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,  கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் எம். எல். ஏ. இன்று வெளியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது.         குறைந்த ஊதியத்தில் பல மணி நேரம் வேலை செய்திட வாட்டி வதைக்கப்பட்ட தொழிலாளர் சமுதாயம் கடந்த 138 ஆண்டுகளுக்கு முன்பு போராடி உரிமை பெற்ற தினம் தான் மே தினம்.          உடலினை எந்திரமாக்கி,  உழைப்பினை உரமாக்கி,  உலகத்தை இயங்க வைக்கும் தொழிலாளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த மே தின நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.   தொழிலாளர்கள் வருடத்தில் ஒருநாள் மட்டுமே நினைத்துப் போற்றப்பட வேண்டியவர்கள் அல்ல.   வருடம் முழுவதும் நினைத்துப் பாராட்டப்பட வேண்டியவர்கள்.        தளர்வறியா  உழைப்பின் மூலம் நம் நாட்டின் பெருமையை உயர்த்தி வரும் தொழிலளார்கள் தங்களது  உரிமைகளை பாதுகாக்கிற வகையில்,  உரிமைக்குரல் எழுப்பும் நாளாக மே 1 ஆம் தேதி அமைய வேண்டும்.   உழைக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.         இவ்வாறு மே தின வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా