கவர்னர் வருகை அரசு விருந்தினர் மாளிகையில் மோப்ப நாய் சோதனை

67பார்த்தது
தமிழக கவர்னர் ஆர். என் ரவி நாளை (22-ம் தேதி) குமரி மாவட்டம் திருவட்டார், வெள்ளிமலை இந்து தர்ம வித்யாபிடம் சார்பில் நடக்கும் வித்யாஜோதி பட்டமளிப்பு விழாவில் வருகை தந்து கலந்து கொள்கிறார். இதற்காக அவர் நாளை காலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்து அங்கிருந்து காரில் சாலை மார்க்கமாக நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகைக்கு வருகை தருகிறார்.
பின்னர் அங்கு ஓய்வெடுக்கிறார். தொடர்ந்து நிகழ்ச்சிக்கு சென்று திருவட்டார் ஆதிகேச பெருமாள் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் மேற்கொள்கிறார்.
இந்நிலையில் அவர் தங்கும் நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் இன்று போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டதுடன், மெட்டல் டிடெக்டர் கருவிக்கொண்டு வெடிகுண்டு சோதனைகளும் மேற்கொண்டனர். கவர்னர் வருகையை முன்னிட்டு நாகர்கோவிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி