இனயத்தில் மணல் எடுக்க எதிர்ப்பு; தபால் அனுப்பும் போராட்டம்

52பார்த்தது
மணவாளக்குறிச்சியில் இந்திய அரசின் அரிய மணல் ஆலை இயங்கி வருகிறது. இந்த மணல் ஆலை சார்பில் கனிம மணல் அகழ்வுசெய்ய இனயம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில்  ஆயிரத்து 144 ஹெக்டேர் நிலங்களை குத்தகைக்கு விட மத்திய மாநில அரசுகள் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  
     இதற்காக  தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வருகின்ற அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி தக்கலையில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தில்  மனவளக்குறிச்சியில் செயல்படும் இந்திய மணல் ஆலைக்காக கடற்கரை கிராமங்களில் மணல் அகழாய்வு செய்ய மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்துவதற்கான செய்தியையும்  வெளியிட்டுள்ளது.  
      இதனால் இனயம், இனயம் புத்தன் துறை ஊராட்சிக்கு உட்பட்ட கடற்கரை கிராமமும் உள்ளடங்கி உள்ளது. இந்த நடவடிக்கையால்  மீனவ கிராமம் பாதிக்கப்படும். எனவே மணல் ஆலை  அகழ்வாய்வு கடற்கரை பகுதியில் வேண்டாம் என எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக இரு தினங்கள் முன்பு அப்பகுதியினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
      இந்த நிலையில் இன்று (18-ம் தேதி) மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும், அரிய  மணல் ஆலையை மூட வலியுறுத்தியும்  இனயம் தபால் அலுவலகத்தில் மனுகொடுத்து, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு  இனயம் புனித ஹெலன் ஆலய பங்கு பணியாளர் பவியன்ஸ் தலைமை வகித்தார். அப் பகுதியை சேர்ந்த  ஏராளம் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி