பத்மநாபபுரம் - Padmanabhapuram

அருமனையில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் மாயம்

அருமனையில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் மாயம்

அருமனை அருகே நொச்சிவிளை என்ற பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ் மகன் ஆகாஷ் (18). இவர் நாகர்கோவில் அருகே உள்ள ஒரு இன்ஜினியரிங் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று (14-ம் தேதி) மாலை வீட்டிலிருந்து வெளியே சென்று விட்டு வருவதாக கூறி சென்ற ஆகாஷ் பின்னர் வீடு திரும்பவில்லை.   இதையடுத்து அவரது பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடினார்கள். ஆனால் அவர் தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. தொடர்ந்து, இது சம்பந்தமாக அடுமனை போலீஸில் அவரது தாயார் சந்திரகுமாரி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்த மாயமான மாணவர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా