கோவையில் ஜிம் பயிற்சியாளரான கீதா(26) சரவணன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும், அண்ணன் - தங்கை முறை என கூறி இரு வீட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், இருவரும் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டு தனியார் விடுதியில் தங்கியிருந்துள்ளனர். இந்நிலையில், அவர்கள் தங்கிருந்த அறையில் கீதா அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில், சடலமாக கிடந்துள்ளார். போலீஸார் விசாரணையில், கீதாவின் நடத்தையில் சந்தேகம் கொண்டு, அவரை சரவணன் அடித்து கொன்றதாக கூறப்படுகிறது.