திற்பரப்பு அருவியில் இன்று குவிந்த  சுற்றுலா பயணிகள்

81பார்த்தது
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பருவ மழை பெய்து வரும் சூழலில் அணைகள் மற்றும் நீர் நிலைகள் நிரம்பியதால் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் கோதையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் திற்பரப்பு அருவியிலும் வெள்ள பெருக்கு ஏற்பட்டு,   திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கப்படவில்லை. தற்போது மீண்டும் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  

இந்த நிலையில் இன்று ( 1 -ம் தேதி) விடுமுறை நாளானதால் குமரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக காணப்பட்டது. திற்பரப்பு அருவியிலும்  சுற்றுலா பயணிகளின் கூட்டம் காலை முதலே அலைமோதியது. அருவியில் வெள்ளம் சீறிப் பாய்ந்த நிலையிலும், மக்கள் ஆனந்த குளியலிட்டனர்.   தமிழகம், கேரளா உட்பட வெளியூர் பயணிகளும் ஏராளம் பேர் வந்திருந்தனர். குமரியில் இன்றும் சில பகுதிகள் மழை பெய்த நிலையிலும், சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி