மறவன்குடியிருப்பில் சிவன் கோவிலுக்கு அடிக்கல் நாட்டு விழா

78பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே  மறவன்குடியிருப்பு பகுதியில் ஊர் சார்பாக ஆத்ம லிங்கேஸ்வரர் ஆலயம் கட்ட வேண்டும் என ஊர்மக்கள் முடிவு செய்தனர். இந்த  நிலையில் இன்று (செப்.,7) அதற்கான  அடிக்கல் நாட்டு விழா  மற்றும் பூமி பூஜை நடைபெற்றது.

இந்த ஆலயம் 5 கோடி ரூபாய்  செலவில்  கருங்கல்களால்  கட்டப்படவுள்ளது. இந்த அடிக்கல் நாட்டு மற்றும் பூமி பூஜை விழாவில் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர்  எம். ஆர். காந்தி,   திருப்பணி குழு தலைவர்  செல்வராஜன்  மற்றும் ஊர் மக்கள்  கலந்து கொண்டனர்.  

முன்னதாக புரோகிதர்கள் மந்திரம் முழங்க பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகச்சிறந்த ஆலயமாக இந்த ஆலய கட்டுமான பணிகள் இருக்கும் என்று ஊர் தலைவர் பால்குமார் என்பவர்  தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி