நாகர்கோவிலில் தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் ஆர்பாட்டம்

80பார்த்தது
தமிழ்நாடு தொடக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்குழு ( டிட்டோஜாக் ) சார்பில் 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று (செப்.,10) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.

குமரியில் நாகர்கோவிலில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆசிரியர் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு வெளியிட்ட அரசானை 243 ஜ ரத்து செய்ய வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதியதிட்டத்தை அமுல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு 15 வருடமாக தீர்க்காமலும் வழங்காமலும் உள்ளது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை ஆர்பாட்டத்தின் மூலம் வலியுறுத்தபட்டது.

வரும் 29, 30, 01 ஆம் தேதிகளில் சென்னைக்கு சென்று கோட்டையை முற்றுகையிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆர்பாட்டத்தின் மூலம் தெரிவித்தனர். இதில் ஏராளம் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி