பத்மநாபபுரம் - Padmanabhapuram

மார்த்தாண்டம்: பெண்ணை தாக்கி வீடு சூறை; 8 பேர் மீது வழக்கு

மார்த்தாண்டம்: பெண்ணை தாக்கி வீடு சூறை; 8 பேர் மீது வழக்கு

மார்த்தாண்டம் அருகே விரிகோடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் மனைவி சாந்தகுமாரி (48). இந்த தம்பதிக்கு கிருஷ்ணன் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். நட்டாலம்  பகுதி சார்ந்த அபித் (23,   மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த சபின் ( 25) இருவரும் கிருஷ்ணனின் நண்பர்கள் ஆவார்கள். சம்பவ தினம் திடீரென ஏற்பட்ட தகராறில் அபின், சபின் சேர்ந்து  கிருஷ்ணனை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த கிருஷ்ணனிடம்,   காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டாம் எனவும் கிருஷ்ணனுக்கு ஏற்பட்ட மருத்துவ செலவுகளை ஏற்பதாக இருவரும் கூறி சமரசம் பேசியுள்ளனர்.        இதை அடுத்து கிருஷ்ணனின் தாயார் சாந்தகுமாரி தனது மகனின் மருத்துவ செலவுக்கான பணத்தை கேட்டுள்ளார்.   இதில் தகராறு ஏற்பட்டு அபித், சபின் மற்றும் கண்டால் தெரியும்  ஆறு பேர் சேர்ந்து கிருஷ்ணனின் வீட்டை அடித்து உடைத்து, சகோதரியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து சாந்தகுமாரி மார்த்தாண்டம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அபித், சஜின்  உட்பட எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా