பத்மநாபபுரம் - Padmanabhapuram

தக்கலை: கணவர் வீட்டு முன் பெண், குழந்தைகளுடன் தர்ணா

தக்கலை: கணவர் வீட்டு முன் பெண், குழந்தைகளுடன் தர்ணா

தக்கலை அருகே உள்ள கல்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் செல்வ ஜோஸ் (35). இவர் கேரள மாநிலத்தில் நகைகளுக்கான ஜம் ஜல் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பிரின்சியா (31) இவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி,   6 வயதில் பெண் குழந்தை, நான்கு வயதில் ஆண் குழந்தை உள்ளது. திருமணத்தின் போது பிரின்சியாவிற்கு அவரது பெற்றோர் வரதட்சணையாக 35 சவரன் தங்க நகைகளும் 3 லட்சம் ரொக்க்கமும் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் செல்வ ஜோஸ் கூடுதல் வரதட்சனை கேட்டு கேட்டதால் கடந்த ஆறு மாதமாக இருவரும் பிரிந்து வாழ்வதாக தெரிகிறது.  இந்த நிலையில் செல்வ ஜோஸ் பெற்றோர் வேறு திருமணம் செய்து வைக்கப் போவதாக தகவல் கிடைத்துள்ளது. இதை அடுத்து நேற்று (அக்.,22) இரவோடு இரவாக தன இரண்டு குழந்தைகளுடன் கணவர் வீட்டுக்கு வந்த பிரின்சியா கணவருடன் சேர்த்து வைக்குமாறு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். சம்பவ இடத்திற்கு சென்ற தக்கலை போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி பிரின்சியாள் மற்றும் குழந்தைகளை  கணவர்  வீட்டிலே தங்க வைத்தனர். கணவன் மனைவி பிரச்சினை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து தீர்வு காணும்படி அறிவித்து  சென்றனர்.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా