பத்மநாபபுரம் - Padmanabhapuram

மார்த்தாண்டம்: சாலை வடிகாலில் பாய்ந்த ஆம்னி பஸ்

மார்த்தாண்டம் அருகே குறும்பேற்றி பகவதி அம்மன் கோவில் அருகே ஏராளமான ஆம்னி பஸ்கள் தினசரி நிறுத்துவது வழக்கம். சென்னை செல்ல வேண்டிய ஆம்னி பஸ் சுத்தம் செய்யப்பட்டு, நேற்று மாலை ஒரு பஸ் கிளம்பியது. அப்போது கோவிலில் இருந்து மெயின் ரோட்டில் ஏறும் போது எதிர்பாராத விதமாக கட்டப் பாட்டை இழந்து  ரோட்டின் மறுபுறம் உள்ள வடிகாலில் பஸ் பாய்ந்தது. இதனால் மார்த்தாண்டத்திலிருந்து விரிகோடு வழியாக கருங்கல் செல்லும் சாலையில் முழுமையாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஜேசிபி கொண்டு வந்து முயற்சி செய்யப்பட்டது. ஆனால் எந்த பலனும் அளிக்கவில்லை. பின்னர் கனரக லாரி மூலம் கயிறு கட்டி முயற்சி செய்யப்பட்டது. ஆனால் கயிறு அறுந்தது. அதனை தொடர்ந்து கிரேன் உதவியுடன் இரவு 8 மணியளவில்  ஆம்னி பஸ் தூக்கி மாற்றப்பட்டது. இதனால் 3 மணி நேரம் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, பின்னர் சீரானது.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా