பத்மநாபபுரம் - Padmanabhapuram

போதையில் தொழிலாளி மீது கும்பல் தாக்குதல் போலீஸ் விசாரணை

போதையில் தொழிலாளி மீது கும்பல் தாக்குதல் போலீஸ் விசாரணை

திக்கணங்கோடு பகுதியை  சேர்ந்தவர் வர்கீஸ் (45). தொழிலாளி. நேற்று மாலை நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த நிலையில் அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் வர்கீஸ் தனது நண்பர்களிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.       இதனால் ஆத்திரமடைந்த நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து வர்கீசை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்தவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.       புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது,  நண்பர்கள் சேர்ந்து வர்கீசை கொடூரமாக தாக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் மூன்று பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా