அரசியலுக்கும் மதத்திற்கும் தொடர்பு இருக்க கூடாது - அமைச்சர்

65பார்த்தது
திருவட்டார் வடக்கு ஒன்றிய திமுக செயல் வீரர்கள் கூட்டம் குலசேகரத்தில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் ஜான்சன் தலைமை வகித்தார்.  இந்த கூட்டத்தில் குமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் மனோதங்கராஜ் சிறப்புரையாற்றினார்.   அப்போது அவர் பேசுகையில், - திமுக இயக்கத்தை அடுத்த தலைமுறைக்கு நாம் கொண்டு செல்ல வேண்டும். இன்று பலர் திமுகவை அழித்து விடுவோம் என்கிறார்கள்.   திமுகவை அழிப்பேன் என்றவர்கள் தான் வந்த சுவடு தெரியாமல் அழிந்து விட்டார்கள்.

       சமூகத்தில் பெண்களுக்கு சம உரிமை, ஜாதி ஏற்றத்தாழ்வுகளை உடைத்து எறிந்தது, அனைவருக்கும் கல்வியை வழங்கியது திமுக. இந்திய துணை கண்டத்தில் மதங்கள் பல உள்ளது. எல்லாவற்றையும் ஒன்றாக பார்ப்பதுடன் மத சார்பற்ற கொள்கையில் திமுக உறுதியாக உள்ளது. இந்திய ஒன்றியத்தில் சமயம் சார்ந்த ஆட்சி நடைபெறுகிறது. அரசியலுக்கும் மதத்திற்கும் தொடர்பு இருக்க கூடாது.   இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் மரிய சிசுகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி