மாந்திரீகத்தில் ஈடுபட்டதாக சந்தேகம்- 5 பேர் அடித்துக்கொலை

82பார்த்தது
மாந்திரீகத்தில் ஈடுபட்டதாக சந்தேகம்- 5 பேர் அடித்துக்கொலை
சத்தீஷ்கார் மாநிலம் ஏக்தால் என்ற கிராமத்தில், மாந்திரீகத்தில் ஈடுபட்டதாக எழுந்த சந்தேகத்தின் பேரில், 3 பெண்கள் உள்பட 5 பேர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மவுசம் கண்ணா(34), அவரது மனைவி மவுசம் பிரி, மவுசம் புச்சா(34), அவரது மனைவி மவுசம் அர்ஜோ(32) மற்றும் கர்கா லச்சி(43) என்ற பெண் ஆகிய 5 பேர் கிராமத்தினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, கொலை பாதக செயலில் ஈடுபட்ட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.