குலசேகரம்: கடைக்குள் புகுந்த ஜீப்; வாலிபர் படுகாயம்

71பார்த்தது
குலசேகரம்: கடைக்குள் புகுந்த ஜீப்; வாலிபர் படுகாயம்
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியிலிருந்து குலசேகரம் நோக்கி இன்று (செப்.,12) அதிகாலையில் சொகுசு ஜீப்  ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த ஜீப் குலசேகரம் சந்தை பகுதியில் செல்லும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அந்தப் பகுதியில் உள்ள கடைகளில் மோதி நின்றது. இதில் கடைகள், ஜீப்பின் முன்பகுதி சேதமடைந்தது.  

அப்போது அந்தப் பகுதி வழியாக காலையில் பால் வாங்க சென்ற வாலிபர் ஒருவர் ஜீப் மோதியதில்  படுகாயம் அடைந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக அங்கு வந்து படுகாயம் அடைந்த வாலிபரை மீட்டு அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

விபத்து நடந்த நேரம் அதிகாலை வேளை என்பதால் வேறு அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை. இதற்கிடையில் ஜீப்பை மோதி விபத்து ஏற்படுத்திய நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ஜீப் டிரைவரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி