வ. உ. சி 153 -வது பிறந்த தினம்: சிலைக்கு அதிமுக மரியாதை

52பார்த்தது
சுதந்திரப் போராட்ட வீரரும் செக்கிழுத்த செம்மலுமான வ. உ. சிதம்பரம் பிள்ளையின் 153 வது பிறந்தநாள் விழா இன்று (செப்.,5) தமிழக அரசு சார்பிலும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் குமரி மாவட்ட அதிமுக சார்பில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் தாழக்குடி பகுதியில் அமைந்துள்ள வ உ சிதம்பரம் பிள்ளையின் திரு உருவ சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

கன்னியாகுமரி, அதிமுக எம்எல்ஏ தளவாய்சுந்தரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் இனிப்புகள் வழங்கி வ. உ. சிதம்பரம் பிள்ளையின் பிறந்த நாளை கொண்டாடினார். நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் அதிமுக நிர்வாகிகள் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி