கிள்ளியூர் - Killiyur

கொல்லங்கோடு: ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

கொல்லங்கோடு: ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

கொல்லங்கோடு அருகே உள்ள மஞ்சதோப்பு காலனி பகுதி சேர்ந்தவர் ஜெஸ்லியன் மகன் பிரிட்டில் ராய் (16). அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் (அக்.,11) விடுமுறை நாளானதால் மாலையில்  நண்பர்கள் மூன்று பேர்கள் பூவார் பொழிக்கரை பகுதியில் நெய்யாற்றில் குளித்துக் கொண்டிருந்தார்கள்.   அப்போது ஆற்றில் மணல் புதைகுழியில் சிக்கி தண்ணீரில் மூழ்கி பிரிட்டில் ராய் இறந்துள்ளார். சம்பவம் இடம் சென்ற பொழியூர் போலீசார் மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரி அனுப்பி வைத்தனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా