கிள்ளியூர் - Killiyur

கொல்லங்கோடு அருகே கூலித் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

கொல்லங்கோடு அருகே கூலித் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

கொல்லங்கோடு அருகே  சங்குருட்டி காலனியை  சேர்ந்தவர் மணிகண்டன் (37). கூலி தொழிலாளி. இவருக்கு  மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் உள்ளனர்.   கடந்த எட்டு ஆண்டுகள் முன்பு மனைவி குழந்தைகளுடன் பிரிந்து சென்று விட்டார்.   அதன் பிறகு மணிகண்டன் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்.       இந்த நிலையில் சம்பவ தினம்  போதையில் ஏற்பட்ட தகராறில்,   தன்னுடன் வசிக்கும் தாயாரை பிடித்து தள்ளியதில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் மேலும் மணிகண்டனை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.      இந்நிலையில் சம்பவதினம் இரவு வீட்டினுள் ஒரு அறையில் மின்விசிறியில் மணிகண்டன்  தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது சம்பந்தமாக கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా