மழை நீரில் சிக்கிய ஆட்டோ.. பச்சிளம் குழந்தை மீட்பு

75பார்த்தது
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், புதுக்கோட்டையில் நேற்று (அக்.12) இரவு கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக அப்பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது, அந்த வழியாக சென்ற ஆட்டோ ஒன்று மழை நீர் வெள்ளத்தில் சிக்கியது. அதில் இருந்து பச்சிளம் குழந்தையில் அழுகை சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் ஓடோடி சென்று ஆட்டோவில் இருந்த கைக்குழந்தை மற்றும் தாயை பத்திரமாக மீட்டனர்.

நன்றி: பாலிமர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி