பாலக்கோடு - Palacode

அரசு அலுவலர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டிய விவசாயி கைது

அரசு அலுவலர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டிய விவசாயி கைது

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட பஞ்சப்பள்ளி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றியவர் சிரஞ்சீவன். இவர் நேற்று (செப்டம்பர் 19) பாலக்கோடு மண்டல துணை தாசில்தார் ஜெகதீசன் மற்றும் வருவாய் துறையினருடன் பட்டாபி நகர் பகுதியில் இருளர் இன மக்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை அளவீடு செய்யும் போது அதே பகுதியை சேர்ந்த விவசாயி சண்முகம் என்பவர் நிலம் அளவீடு செய்யும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது நிலத்தை அளவிடும் அதிகாரிகளை ஆபாச வார்த்தைகளில் செய்ய விடாமல் ரகளை செய்ததாக கிராம நிர்வாக அலுவலர் சிரஞ்சீவன் அளித்த புகாரின் பேரில் பஞ்சப்பள்ளி காவலர்கள் வழக்கு பதிவு செய்து சண்முகத்தை கைது செய்தனர்.

வீடியோஸ்


தர்மபுரி