புரட்டாசி மாதத்தை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் வழிபாடு

59பார்த்தது
புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை தினத்தை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில் கோயிலும் நேற்று செப்டம்பர் 21 அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் வழிபாடுகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கொண்டு சிறப்பு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். குறிப்பாக தர்மபுரி கோட்டை வர வாசுதேவ பெருமாள் கோவில், தர்மபுரி குமாரசாமிப்பேட்டை ஸ்ரீதேவி பூதேவி சமதே சென்னை கேச பெருமாள் கோவில், கடைவீதி பிரசன்னம் வெங்கட்ரமண சாமி திருக்கோவில், அதகப்பாடி லட்சுமி நாராயண சாமி திருக்கோவில், மணியம்பாடி வெங்கட்ரமண சாமி கோவில், செட்டி கரை பெருமாள் கோவில், அதியமான் கோட்டை சென்ற பெருமாள் சாமி கோவில் உள்ளிட்ட கோவிலிகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இந்த வழிபாடுகளில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட நெடும் வரிசையில் இன்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் அனைத்து கோவில்களிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி