காரிமங்கலம் வார சந்தையில் 10 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை

59பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரிமங்கலத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிற்பகலில் தேங்காய்கள் விற்பனைக்காகவே பிரத்தியேகமாக மாவட்ட அளவிலான பிரசித்தி பெற்ற வார சந்தை நடைபெறுகிறது. நேற்று செப்டம்பர் 16 பிற்பகல் நடைபெற்ற வார சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் இருந்து1 லட்சம் எண்ணிக்கையிலான தேங்காய் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.
தேங்காய்களின் அளவிற்கேற்ப ரூபாய் 7 முதல் 14. ரூபாய் வரையிலான விலையில் தேங்காய்கள் விற்கப்பட்டன. மொத்த விற்பனை ரூ. 10 லட்சம் ஆக இருந்தது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி