அரசு பள்ளி & பால் உற்பத்தியாளர் சங்கத்தில் ஆட்சியர் கள ஆய்வு

80பார்த்தது
அரசு பள்ளி & பால் உற்பத்தியாளர் சங்கத்தில் ஆட்சியர் கள ஆய்வு
தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி அவர்கள் நல்லம்பள்ளி வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இன்று (செப்டம்பர் 19) காலை நார்த்தம்பட்டி அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை ஆய்வு செய்தார். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவினை அருந்தி அதனுடைய தரம் மற்றும் காலை உணவு சமைக்க பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களை ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு )திருமதி. சுமதி மற்றும் நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து லளிகம் ஆவின் பால் கொள்முதல் மையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை ஆய்வு செய்து பால் உற்பத்தியாளர்களுக்கு பண பட்டுவாடா செய்யப்பட்ட விவரம் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்புடைய செய்தி