தர்மபுரியில் மாநில அளவிலான மல்லர் கம்பம் போட்டி

81பார்த்தது
தமிழர் தற்காப்பு பயிற்சி பள்ளி, தமிழ்நாடு அமெச்சூர் மல்லர் கம்பம் சங்கம், தர்மபுரி மாவட்ட மல்லர் கம்பம் சங்கம் சார்பில் மாநில அளவிலான மல்லர் கம்பம் போட்டிகள் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்தது. போட்டிகளுக்கு அமெச்சூர் மல்லர் கம்பம் சங்கத்தின் நிறுவனர் செல்வ. பிரகாஷ் தலைமை வகித்தார். போட்டிகளை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் துவக்கி வைத்தார்.

போட்டிகளில் தர்மபுரி, சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், சிவகங்கை, கள்ளக்குறிச்சி உள்பட 13 மாவட்டங்களில் இருந்து 150 வீரர் வீராங்கனைகள் பே ட்டிகளில் பங்கேற்றனர். ஒரு வட்டத்திற்கு 6 வீரர்கள், 6 வீராங்கனைகள் என வீரர்கள் நிலை மல்லர் கம்பம் பேட்டிகளிலும், வீராங்கனைகள் கயிறு மல்லர் கம்பம் போட்டிகளிலும் குழு மற்றும் தனிநபர்களாக போட்டிகளில் பங்கேற்றனர். இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பதங்கங்கள், கோப்பை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. போட்டிகளை அமெச்சூர் மல்லர் கம்பம் சங்க பொருளாளர் முருகன், தர்மபுரி மாவட்ட மல்லர் கம்பம் சங்க செயலாளர் சண்முகம் உள்ளிட்ட குழுவினர் ஒருங்கிணைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி