கடனை திருப்பி கேட்ட மருமகனை தாக்க முயன்ற மாமனார்

71பார்த்தது
கடகத்தூர் அடுத்த மாட்டியாம்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவக்குமாரிடம் அவரது மாமனார் ரங்கநாதன் 7 லட்சம் ரூபாயும். சின்ன மாமனார் கோவிந்தன் 3 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளனர். சில ஆண்டுகளுக்கு பின் கடன் கொடுத்த மாமனார் மாமியார் இடத்திலும் சின்ன மாமனார் இடத்திலும் கொடுத்த பணத்தை சிவக்குமார் திருப்பி கேட்டுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மருமகனுக்கும் மாமியார் குடும்பத்திற்கும் பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் ஊர் கோவில் திருவிழாவுக்கு சிவகுமாரை மாமனார் அழைத்த நிலையில், அவர் திருவிழாவுக்கு வராததை அடுத்து மாமனார் ரங்கநாதன் மாமியார் ரத்னா & சின்ன மாமனார் நேற்று செப்டம்பர் 11 கோவிந்தன் சில அடி ஆட்களுடன் தாக்க முயற்சித்த போது சிவகுமார் தன் மகளுடன் வீட்டிற்குள் சென்று தாலிட்டுக் கொண்டுள்ளார். இதனால் வீட்டின் கதவை வெளியில் தாளிட்டு கடப்பாரை கம்பியால் கதவை பல இடங்களில் குத்தி தகர்த்துள்ளனர்.

மேலும் சிவக்குமார் ஆட்சியர் அலுவலக புகார் எண்ணான 1077 என்ற எண்ணை தொடர்பு கொண்டு காப்பாற்றும்படி கூறியுள்ளார். சிவக்குமாரின் மகள் 100 காவல் அவசர உதவிக்கு போன் செய்துள்ளார். அவர்கள் மதிகோண்பாளையம் காவல் நிலையத்திற்கு தெரிவித்து வர சொல்வதாக கூறி உள்ளனர். விடியற் காலை வரை யாரும் வராததால், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி