
பூவாணிக்குப்பம்: குடற்புழு நீக்க மாத்திரை வழங்குதல்
குடற்புழு தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளான ஊட்டச்சத்து குறைபாடு, ரத்த சோகை, குமட்டல், வயிற்று வலி, வயிற்றுப் போக்கு முதலிய பாதிப்புகளிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற நாடு தழுவிய தேசிய குடற்புழு நீக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூவாணிக்குப்பம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குடற்புழு மாத்திரைகள் வழங்கப்பட்டது.