நெய்வேலி - Neyveli

விருத்தாசலம் அருகே கூழாங்கற்கள் கடத்தல்

விருத்தாசலம் அருகே கூழாங்கற்கள் கடத்தல்

விருத்தாசலம் நகரத்திற்கு உட் பட்ட ஆலடி ரோடு முடக்கு பகுதியில் புவியியல் மற்றும் சுரங்க துறை உதவி இயக்குனர் ரமேஷ்குமார், விருத்தாசலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆலடி பகுதியில் இருந்து வந்த லாரியை நிறுத்தினர். அதற்குள் சற்று தூரத்தில் லாரியை நிறுத்தி விட்டு, டிரைவர் தப்பி ஓடி விட்டார். அதிகாரிகள் லாரியை சோதனையிட்ட போது, 3 யூனிட் கூழாங்கற்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, லாரியை பறிமுதல் செய்து விருத்தாசலம் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிரைவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

வீடியோஸ்


హైదరాబాద్