மேட்டுப்பாளையம் - Mettupalayam

பேருந்து நிலையத்தில் பயணி திடீர் உயிரிழப்பு!

பேருந்து நிலையத்தில் பயணி திடீர் உயிரிழப்பு!

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு தினசரி நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த முத்து என்பவர் பேருந்தில் பயணம் செய்து நேற்று (செப்.,12) மதியம் மேட்டுப்பாளையம் வந்துள்ளார். பின்னர் பேருந்து நிலையத்தில் காத்திருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அன்பு ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்தனர். ஆம்புலன்ஸ் மூலம் அவரை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా