முசிறி - Musiri

திருச்சி: எலிபேஸ்ட் சாப்பிட்டு கல்லூரி மாணவி தற்கொலை

திருச்சி: எலிபேஸ்ட் சாப்பிட்டு கல்லூரி மாணவி தற்கொலை

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே நெய்குளத்தில் கல்லூரிக்கு பணம் கட்டுவதில் ஏற்பட்ட தாய், தந்தை தகராறில் மனமுடைந்த கல்லூரி மாணவி எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறுகனூர் அருகே உள்ள நெய்குளம் தெற்குத்தெருவை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மகள்  கிருஷ்ணவேணி(18) பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி. காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரிக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று கிருஷ்ணவேணி பெற்றோரிடம் கடந்த சில நாட்களாக கூறி வந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக, கிருஷ்ணவேணியின் தாய்-தந்தைக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், மனம் உடைந்த கிருஷ்ணவேணி தன்னால் தானே பெற்றோர்கள் சண்டை போட்டுக் கொள்கிறார்கள் என நினைத்து எலிபேஸ்ட் சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதை கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று(அக்.23) பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా