
தொட்டியம் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர் தீக்குளித்து பலி
தொட்டியம் அருகே உள்ள கணேசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் பக்கவாத நோய் மற்றும் கடன் சுமை காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத வேளையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பேரில் தொட்டியம் போலீசார் அவரது உடலை மீட்டனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.