துறையூரில் ஒரு மணி நேரமாக கனமழை

85பார்த்தது
திருச்சி மாவட்டம் துறையூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

துறையூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த நான்கு தினங்களாகவே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது அவ்வப்போது சாரல் மழை பொழிந்து வந்தது. இந்நிலையில் இன்று மதியம் 1. 30 மணி அளவில் பொழிய தொடங்கிய மழை ஒரு மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கி வருகிறது துறையூர் நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள காளிப்பட்டி பகளவாடி கரட்டாம்பட்டி அம்மாபட்டி, சொரத்தூர் கீரம்பூர் முத்தையம்பாளையம் நல்லியம்பாளையம் செங்காட்டுப்பட்டி சிக்கதம்பூர் ஒக்கரை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை வெளுத்து வாங்கி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி