துறையூர்--வாட்டர் ஹீட்டரில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

77பார்த்தது
துறையூர் அருகே உள்ள ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் பிரதீப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துள்ளார். சம்பவம் நடந்த நேற்று காலை குளிப்பதற்காக வாட்டர் ஹீட்டரில் வெண்ணீர் வைத்துள்ளார் அப்போது தண்ணீர் சூடாகி விட்டதா என்பதை பார்ப்பதற்காக கைய வைத்துள்ளார் இதில் மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக உறவினர்கள் அவரை துறையூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த துறையூர் போலீசார் பிரதீபின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி