குழாய் பதிக்கும் பணியாள் போக்குவரத்து பாதிப்பு

81பார்த்தது
திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கம்பரசம் பேட்டை அருகே குடமுருட்டி பகுதியில் சாலை ஓரங்களில் குழாய் பதிக்கும் பணி கடந்த இரண்டு மாதமாக நடைபெற்று வருகிறது இந்நிலையில் நேற்று அய்யாளம்மன் கோயில் நுழைவாயில் அருகே குழாய் பதிக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் மாலை 6 மணிக்கு மேல் குழாய் பதிக்கும் பணியில் தாமதமானதால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கலைஞர் அறிவாலயத்திலிருந்து இருந்து கம்பரசம் பேட்டை வரை இருபுறங்களிலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. போக்குவரத்து காவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரவு நேரங்களில் நடைபெறும் பணியால் வேலைக்கு சென்று வீட்டிற்கு திரும்பும் நபர்கள், பொதுமக்கள் மற்றும் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி