போதையில் சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞர் கைது

58பார்த்தது
போதையில் சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞர் கைது
கர்நாடக மண்டியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (25). இவர் கேரள மாநிலத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு கிருஷ்ணமூர்த்தி, 17 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்ததை கவனித்துள்ளார். உடனே, அந்த வீட்டிற்குள் போதையில் சென்ற கிருஷ்ணமூர்த்தி, சிறுமியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் குற்றவாளியை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி