பேருந்தில் ஏற்பட்ட தகராறில் கீழே விழுந்து நடத்துநர் உயிரிழப்பு

70பார்த்தது
பேருந்தில் ஏற்பட்ட தகராறில் கீழே விழுந்து நடத்துநர் உயிரிழப்பு
பேருந்தில் ஏற்பட்ட தகராறில் கீழே விழுந்து நடத்துநர் உயிரிழந்தார். சென்னை அண்ணா ஆர்ச் அருகே அரசுப் பேந்தில் டிக்கெட் எடுக்கும் போது நடத்துநருக்கும், போதையில் இருந்த பயணிக்கும் இடையே நடந்த தகராறில் கைகலப்பாகி கீழே விழுந்த நடத்துநர் ஜெகன் உயிரிழந்தார். பயணி கோவிந்தனை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர். எம்கேபி நகர் முதல் கோயம்பேடு செல்லும் பேருந்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த நடத்துநருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி