தொட்டியம்-கொடுத்த கடனை திருப்பி கேட்ட மூதாட்டி கொலை

60பார்த்தது
தொட்டியத்தில் கொடுத்த கடனை திருப்பி கேட்ட மூதாட்டி அடித்துக் கொலை - உறவினர் கைது

தொட்டியம் வள்ளுவர் நகரை சேர்தவர் தனபாக்கியம் இவரைஸகணாவில்லை என உறவினர் ராஜேந்திரன் தொட்டியம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணையை மேற்கொண்டனர். விசாரணையில் 4-ம் தேதி தனபாக்கியம் அவரது உறவினர் காந்தி நகரை சேர்ந்த ராஜாங்கம் மகன் ஹரிஹரசுதன் (35) என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் கடைசியாக சென்றது தெரியவந்தது. பின்னர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி கள்ளக்குறிச்சியில் இருந்த ஹரிஹரசுதனை பிடித்து வந்து காவல் நிலையத்தில் முறைப்படி விசாரித்தனர். அப்போது ஹரிஹரசுதன் தனபாக்கியத்திடம் 3 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றதும், பொது இடங்களில் தனபாக்கியம் கடனை கேட்டு வந்ததாகவும், பணத்தை தராததால் அவதூறாக திட்டியதால் பணம் தருவதாக கூறி காந்தி நகரில் பின்பக்கம் உள்ள முள் காட்டிற்கு தனபாக்கியத்தை அழைத்து சென்று கொலை செய்து அவர் அணிந்திருந்த நகைகளை எடுத்துக்கொண்டு தனபாக்கியம் உடலை சாக்குப் பையில் கட்டி வாய்க்காலில் வீசிவிட்டு வந்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். உடல் உருக்குலைந்து எலும்பு கூடாக இருந்த நிலையில் தனபாக்கியம் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்வதற்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி