தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் மழை

68பார்த்தது
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் மழை
தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கும், தஞ்சாவூர், திருவாரூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி