பைக் மீது பேருந்து மோதியதில் பைக் எரிந்து நாசம் ஒருவர் பலி

78பார்த்தது
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே மொபட் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். மற்றொருவர் படுகாயங்களுடன் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்
பட்டுள்ளார். விபத்தில் மொபட் எரிந்து நாசமானது.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஜம்புமடை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முத்தாள் நாயுடு (59) ,
தலம சாமி (57). நேற்று மாலை இருவரும் மொபட் ஒன்றில் தொட்டியம் அருகே உள்ள மேய்க்கல்நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள கடைக்கு வந்துள்ளனர். மொபெட்டை முத்தாள் நாயுடு ஓட்டியுள்ளார்.
அப்போது வாழவந்தி சத்திரம் என்ற இடத்தில் நாமக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி வந்த தனியார் பேருந்து மொபெட் மீது மோதி இழுத்துச் சென்றது இதில் மொபெட் தீப்பிடித்து எரிந்தது. விபத்தில் படுகாயம் அடைந்த முத்தாள் நாயுடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார் பின்னால் அமர்ந்து வந்த தலம சாமி படுகாயங்களுடன் அப்பகுதியினர் உதவியுடன் நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். விபத்து குறித்து தகவல் அறிந்த அப்பகுதியினர் பலமுறை இந்த இடத்தில் வேக கட்டுப்பாட்டிற்கு பேரி கார்டு வைக்க வேண்டும் என வலியுறுத்தியும் நெடுஞ்சாலை துறையினர் பின்பற்றவில்லை என கூறி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் திருச்சி நாமக்கல் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி