சாத்தூர் - Sattur

சாத்தூர்: சரவெடி தயார் செய்தவர் கைது

விருதுநகர் மாவட்டம், சாத்துார் அருகே செவல்பட்டியில் அகத்தியன் என்ற பெயரில் அலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலை மாவட்ட வருவாய் அனுமதி பெற்று இயங்கி வருகிறது. தற்போது தீபாவளி நேரம் என்பதால் பட்டாசுகள் தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பட்டாசு ஆலைகளில் சட்டவிரோதமாக செயல்படுவதை தடுக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் தனி குழு அமைத்து சோதனை செய்து வருகின்றனர். அதன் பேரில் செவல்பட்டி கிராம நிர்வாக அலுவலர் வெள்ளை பாண்டியன் தலைமையில் ரோந்து பணி செய்யும்போது செவல்பட்டியில் இயங்கி வரும் அகத்தியன் பட்டாசு ஆலையில் சோதனை செய்யும் போது உச்ச நீதிமன்றம் தடை செய்த சரவெடிகளை தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். தயார் செய்த சரவெடிகளை பறிமுதல் செய்த கிராம நிர்வாக அலுவலர் வெள்ளைபாண்டியன், வெம்பக்கோட்டை காவல் நிலையத்தில் அந்தோனி செல்வராஜ் மீது புகார் அளித்ததின் பேரில் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


விருதுநகர்
கண்ணியம் குறித்து பாடமெடுக்க தேவையில்லை!
Oct 18, 2024, 16:10 IST/

கண்ணியம் குறித்து பாடமெடுக்க தேவையில்லை!

Oct 18, 2024, 16:10 IST
யாரும் புண்பட்டுவிடக்கூடாது என்பது திராவிடம். மற்றோரைப் புண்படுத்தி மகிழ்வது ஆரியம். இதற்கு மேலும் ஓர் உதாரணமே தமிழ்தாய் வாழ்த்தில் திராவிடம் தவிர்க்கப்பட்டது. சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்காது. வரிகளை நீக்கினால் ‘திராவிடம்’ வீழாது. இதைப் புரிந்து கொள்ளாத ஆரியநர், அண்ணா வழியில் நடைபோடும் நம் தலைவர் அவர்களுக்கு, ‘கண்ணியம்’ குறித்துப் பாடமெடுக்கத் தேவையில்லை. ஒருமைப்பாட்டுக்கு உலைவைக்க நினைக்கும் அவரை, ஒன்றிய அரசு உடனேத் திரும்பப்பெற வேண்டும் என துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.