சர்த்துார்: விளம்பர பேனர் வைத்த குற்றத்திற்காக வழக்கு...

51பார்த்தது
சாத்தூரில் பட்டாசு விற்பனை குறித்து விளம்பர பேனர் வைத்த குற்றத்திற்காக, பேனர்வைத்தவர் மீது வழக்கு பதிவு.
விருதுநகர் மாவட்டம்,
தீபாவளி இன்னும் சில நாட்களில் வர உள்ள நிலையில், பட்டாசு வாங்குவதற்கு பிற மாவட்டங்களிலிருந்து பட்டாசுகள் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் கவரும் விதத்தில் டிஜிட்டல் பேனரை சாத்துாரிலிருந்து சிவகாசிக்கு செல்லும் சாலை முக்கு ரோட்டில் சிவகாசி சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் தனது பட்டாசு கடை விளம்பர பேனரை வைக்கப்பட்டு இருந்தன. மேலும் சாத்துார் நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முருகேஸ்வரன் சிவகாசி சாலையில் ரோந்து பணியில் ஈடுபடும் போது பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி விளம்பர பேனரை கைப்பற்றி பட்டாசு கடை உரிமையாளர் ஆனந்தராஜ் மீது சாத்துார் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி