ஸ்ரீவில்லிபுத்துார், சாத்தூர் பகுதியில் மிதமான மழை...

84பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்துார் மற்றும் சாத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரத்தில் மிதமான மழை. விவசாயிகள் மகிழ்ச்சி.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் ம்ற்றும் சாத்துார் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் சுட்டெரித்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் இரவு நேரத்தில் திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து ஸ்ரீவில்லிபுத்துார், மல்லி, தைலாபுரம், வன்னியம்பட்டி, மம்சாபும் வத்றாப் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், மேலும் சாத்துார், இருக்கன்குடி, தாயில்பட்டி, கோட்டையூர், ஏழாயிரம்பண்ணை, வெம்பக்கோட்டை போன்ற சுற்று பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தன. மேலும் மழை காரணமாக நகரின் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. மேலும் பல இடங்களில் காற்று வீசியதால் மரங்கள் முறிவு ஏற்பட்டு சாலைகள் மற்றும் தெருக்களில் விழுந்து போக்குவரத்து தடைப்பட்டன. மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. பல நாட்களுக்குப் பின்னர் மழை காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவியதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி