சாத்தூர்: சட்டவிரோதமாக சரவெடி தயார் செய்தவர் கைது...

63பார்த்தது
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் சட்டவிரோதமாக சரவெடி தயார் செய்தவர் கைது. சரவெடிகள் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
சாத்தூர் அருகே அழகாபுரில் தாயில்பட்டியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த பட்டாசு ஆலையிலுள்ள அறை எண் Iல் உச்ச நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்ட சரவெடிகள் தயார் செய்யப்படுவதாக வெம்பக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் வந்தன. மேலும் தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் கேசவன் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். ஆய்வில் முழுமையாக தயார் செய்யப்பட்ட சரவெடி பெட்டிகள் 4 கேஸ், மற்றும் கருந்திரிகள் ஆகியவை இருப்பு இருந்தன. மேலும் அதை பறிமுதல் செய்த போலீஸார் ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி